இருந்த இடத்திலேயே இனி பெறலாம்
இந்த நிலையில், இருந்த இடத்திலேயே பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் சேவா என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஜூன் 26ஆம் தேதி 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த செயலியை செல்போன் , கணிப்பொறி , லேப்டாப் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.
இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்ப்போர்ட்டை விரைவாக பெற இயலும் .
நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில் , நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் .
No comments:
Post a Comment