Monday 30 April 2018

IPL 2018 - CSK vs DD | தோனி அதிரடி : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!!!

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. புனேவில் நடக்கும் 30வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘டாஸ்’ வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 


சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்து காலம் இறங்க முடிவுசெய்தது . சிறந்த தொடக்கம் :
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சன் & டூப்லெஸிஸ் ஜோடி முதல் விக்கெட்க்கு 00 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் டுப்லெஸிஸ் கேட்ச் என்ற முறையில் ஆட்டமிழந்தார் . பின்னர் இறங்கிய ரெய்னா சொற்ப ரனில் ஆட்டமிழக்க சென்னை அணி சிறு தடுமாற்றம் கண்டது. ஆனாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் . அவர் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் இருந்தது .

டோனி அசத்தல் ஆட்டம் 

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றா ர். தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சிக்ஸர்களை விளாசினார். ராயுடு வுடன் ஜோடி சேர்த்து அணியின் ஸ்கோரை 211 ஆக உயர்த்தினார். இறுதியில் 212 எதுதான் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி .

டெல்லி அணி திணறல் :

டெல்லி அணி பேட்டிங் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது ஆனால் பவர் பழைய ஓவர்களில் 56 ரன்கள் குவித்திருந்தநிலையில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது . ஏழாவது ஓவரின்  முடிவில் டெல்லி அணியின் ஷ்ரேயஸ் ஐயர் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார் . ஜடேஜா வீசிய ஒன்பதாவது ஓவரில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன மாக்ஸ்வேள் போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்க டெல்லி அணி மிக பெரிய சரிவை சந்தித்தது . ரிஷஅப்  பந்த் நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார், அவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் குடுத்து அவுட் ஆனார். பிராவோ வீசிய 19 வது ஓவரில் 3 சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் விஜய் ஷங்கர் . இருபது  ஓவர்கள் முடிவடைந்த நிலையின் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது . விஜய் ஷங்கர் ஆட்டம் இழக்காமல் இறுதி வரை போராடினார். அவர் 31 பந்துகளில் 54* ரன்கள் எடுத்திருந்தார்.
 ஆட்டநாயகன் விருது 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் க்கு கொடுக்கப்பட்டது .



Wednesday 25 April 2018

அசத்திய டோனி நொந்து போன கோஹ்லி - IPL 2018 CSK vs RCB

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  ஐபிஎல்., தொடரின் 24 வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான  சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது . பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில உள்ள அணிகளின் மோதல் என்பதால் போட்டியின் எதிர்ப்பார்ப்பு வழுத்திருவலுவாக காணப்பட்டது.... 



டாஸ் ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்சை அணிபவுலிங் செய்யமுடிவெடுத்தது . தொடக்கம் முதலே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுப்பதில் தீவிரம் காட்டியது பெங்களூரு அணி . 20 ஓவர் முடிவில் 205/8 என்ற இலக்கை நிர்ணயித்தது .

ராயுடு அசத்தல் 

தொடக்கம் முதலே ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . வாட்சன் , ரெய்னா , ஜடேஜா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த நிலையியில் தோணியுடன் ஜோடி சேர்ந்து 100 ரன் பார்ட்னெர்ஷிப்பில் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார் .

தோனியின் சிறப்பான ஆட்டம்

கடைசி இரண்டு ஓவரில் 32 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டோனி பிராவோ ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . டோனி 34 பந்துகளில் 70* எடுத்து ஆட்டம் இழக்காமல் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் . பிராவோ 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.

விராட் விரக்தி

ராயல் சாலெங்கேர்ஸ் பெங்களூரு அணி 200+ ரன் எடுத்தும் வெற்றி பெறமுடியாமல் போனது வருத்தம் தருகிறது என்று பரிசளிப்பு பகுதியில் பதிவிட்டார் .


இறுதியில் ஆட்டநாயகன் விருது சிறப்பாக விளையாடிய தோனிக்கு வழங்கபட்டது .



Sunday 22 April 2018

CSK அசத்தல் வெற்றி - மைதானத்தில் தோனிக்கு காதல் தூது விட்ட ரசிகை !!!!


இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.  ஐபிஎல்., தொடரின் 20 வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான  சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது . பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில உள்ள அணிகளின் மோதல் என்பதால் போட்டியின் எதிர்ப்பார்ப்பு வழுத்திருவலுவாக காணப்பட்டது..

டாஸ் ஜெயித்த சன் ரைசெர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்சை பேட்டிங் செய்ய பணித்தது . தொடக்கம் முதலே சிறந்த பந்துவீச்சில் ஈடுபட்டு ரன் எடுப்பதை கடினமாக்கியது ஹைட்ரபாத் அணி. ஷேன் வாட்சன் 9(10), டுப்லெஸிஸ் 11(13) வெளியேறி சென்னை அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 7 ஓவர் முடிவடைந்த நிலையில் 31/2 ரன்னில் ராயுடு - ரெய்னா ஜோடி சேந்தது. இவர்கள் அணியின் ஸ்கோரை நன்கு உயர்த்தினார். இதில் ராயுடு அதிரடியாக ரன்கள் சேர்க்க, சென்னை அணி, சரிவில் இருந்து மீண்டு வந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தனர். அவர்களின் பட்டியல் ராயுடு அரைசதம் விளாசினார்.  பின்னர் இறங்கிய டோனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் 20 ஓவேரில் 182/3 என்ற இலக்கை அடைந்தனர்.

ஹைதெராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஷிகார் தவான் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டது ஹைதெராபாத் அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது . எனினும் புதுமுக வீரரான ரிக்கி புய் களம் இரக்கப்பட்டார் . ஆனால் அவர் முதல் ஒவேரிலேயே  டுக்கவுட் என்ற முறையில் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கேப்டன் வில்லியம்சன் விளாசல் 
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹைட்ரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .  ஆனால் ஒரு புறம் சென்னை அணி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தது .  சென்னை அணியின் தீபக் சஹர் சிறந்த பந்துவீச்சில் ஈடுபட்டார். இவர் இந்த சீசன் நின் முதல் மெய்டன் விக்கெட் எடுத்து தனது பங்கை பதிவு செய்தார். எனினும் வில்லியம்சன் - யூசுப் பதான் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீடாது.

IPL 2018: MS Dhoni
இந்நிலையில் கடைசி ஒவேரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த பொது பிராவோ வை தோனி பந்து வீச அழைத்தார். 1 சீஸ் 1 பௌர் அடித்து பயம் காட்டிய ரஷீதால் கடைசி பந்தில் 6 ரன் அடிக்க தவறினார் . சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் இறுதியில் வென்றது. 

ஜடேஜா அசத்தல் 
நீண்ட இடைவெளிக்கு பின் 4 ஓவர் வீச ஜடேஜாவுக்கு இன்று வாய்ப்பு கிடைத்தது . அவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் . அவர் 4 ஓவர்கள் போட்டு 29 ருங்கள் மட்டுமே கொடுத்திருந்தார். மேலும் வில்லியம்சன் அடித்த பந்தை இலாவகமாக பிடித்து கேட்ச் என்ற முறைப்படி வெளியேற்றினார் . சிறந்த கேட்ச்கான விருதும் கிடைத்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ராயுடு வின் 79(37) ஆட்டத்திற்கு சிறந்த ஆட்டநாயகன் விருது வழங்க பட்டது.

சென்னை முதல் இடம் 
இந்த அபார வெற்றியால் சென்னை மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது . புள்ளி பட்டியலில் சென்னை அணி 5 போட்டிகள் விளையாடி 4 போட்டியில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது .


போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதில் ஒரு ரசிகை டோனியை தான் காதலிப்பதாகவும் டோனி தான் தன்னுடைய முதல் காதல் என்றும் குறிப்பிட்ட வாசகம் தாங்கிய தாளை கேமெராவில் அனைவரும் பார்க்க காண்பித்தார் . 


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் பெற  கிளிக் செய்யவும் 




YETI - "THE BIG FOOT" AN UNSOLVED MYSTERY (Tamil)



ஆசியா கண்டத்தில் ஹிமாலய பகுதிகளில் மிக பிரபலமான ஒரு மர்மம் தான் இந்த எட்டி எனப்படும் பனிமனிதன் .  பனிமனிதனை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருதலும் இன்றளவும் எந்த ஒரு பெரிய ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் விசித்திரமாகவுள்ளது.

பனிமனிதனை பற்றிய சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் பற்றியும் சாத்தியக்கூறுகள் பற்றயும் இந்த பதிவில் காண்போம்.

எட்டி-யின் வரலாறு

எட்டி என்பது இமாலய பகுதிகளில் பரவலாக பேசப்படும் புராண கதைகளில் வர கூடிய சிவனின் எதிர்மறை கதாபாத்திரமாகும் . சுருக்கமாக ஒரு ஆபத்தான மிருககுணம் கொண்டவன் என்று கூறலாம் .



அலெக்சாண்டர் ஒரு முறை ஹிமாலயம், இண்ட்ஸ் பள்ளத்தாக்கை கைப்பற்றியபோது (326 B.C)   எட்டி பற்றி கேள்வி பட்டு எட்டி-யை பார்க்க விரும்பியதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஊர் மக்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது .

இமயமலைக்கு பயணம் சென்று திருப்பிய இங்கிலாந்து நாட்டின் ஆய்ய்வலர்கள் கூற்றுபடி பல்வேறு வழித்தடங்களில் மிகப்பெரிய காலடிகளை கண்டதாக பதிவிற்றிருக்கிறார்கள்.

"Still Living? Yeti, Sasquatch, and the Neanderthal Enigma"  என்ற புத்தகத்தில் Myra Shackley எட்டி -யை பற்றி சில விசித்திரமான தகவல்களை பதிவிற்றுருக்கிறார் . அதில் எட்டி-யை பார்த்த சில மலை வாழ் மக்களின் கூற்றுப்படி எட்டி சுமார் 8 அடி உயரமும் சுமார் 200 கிலோ விற்கு குறைவில்லாத எடையும் கரிய நிறமும் மேலும் வேட்டையாடி உணவை உண்ணும் பழக்கமும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் மிகுந்த சத்தத்துடன் அது உறுமும் சத்தமும் கேட்டதாக கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்கள் உண்மையா என்பது தெரியவில்லை என்றும் தவறாக அடையாளம் காணப்படவையைக்கூட இருக்கலாம் இன்றும் குறிப்பிட்டுள்ளார்.

எட்டி-யின் புகைப்படமும் சர்ச்சைகளும் 

1986 ஆம் ஆண்டு Anthony Wooldridge என்பவர் இமாலய மலையில் நடை பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விசித்திரமான காலடியை பார்த்து அதை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார் , அது ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றிருக்கிறது , சற்றும் எதிர்பாரத விதமாக தூரத்தில் நிறுத்த ஒரு மிக பெரிய கரியஉருவத்தை பார்த்திருக்கிறார், உடனே தான் கைவசம் வைத்திருந்த காமெராவின் 2 புகைப்படங்களை பதிவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார். அந்த புகைப்படமே எட்டி-யை பற்றிய நம்பிக்கையை அனைவர்க்கும் கொடுத்துள்ளது . 


மேலும் பல சர்ச்சைகளுக்கு பின்னர் அது ஆராய்ச்சியார்களால் ஆராயப்பட்டு உண்மையான புகைப்படம் தான் என்று வெளியிட்டுள்ளனர்.. இன்றளவும் எட்டி இருப்பததற்கு சாட்சியாக உள்ளது ஆதாரங்களுள் இந்த புகைப்படம் தாஒன்று .

ரஷ்யாவின் தேடல் 

2011 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஆராச்சியாளர்கள் குழுவை எட்டி ஆராய்ச்சிக்கு ஹிமாலயம் செல்ல ஆணையிட்டடது . தனது ஆராய்ச்சி முடிவையும் பல திடுக்கிடும் தகவல்களையும் பயணத்தின் முடிவில் வெளியிட்டது அந்த ஆராய்ச்சி குழு. அந்த குழுவுடன் பயணம் செய்த உயிரியல் ஆராய்ச்சியாளரான Bindernagel தனது பதிவில் எட்டி இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் அதன் உறைவிடம் அமைத்தல், வேட்டையாடும் விதம், அதன் உயரம், எடை பற்றி நாம் அறிந்தவை அனைத்தும் உண்மையே என்றும் மேலும் அதில் 2 வகை பிரிவுகள் உள்ளதாகவும் கூறுகிறார். மாமிசம் உண்ணும் வெண்மை நிற பனிமனித இனமும் BIG FOOT என்ற இனமும் வேறுவேறு என்று கூறுகிறார் .

மற்றுமொரு ஆராய்ச்சியாளரான Jeff Meldrum அதே குழுவில் பயணம் சென்றவர் இது அனைத்தும் கட்டுக்கதையே என்றும் மேலும் ரஷ்யா அரசு பல உண்மைகளை பொய்யாக தொடுத்துள்ளது என்றும் கூறுகிறார். 

பல நூற்ற்றாண்டு காலமாக இருந்துவரும் இந்த மர்மம் இன்றும் சர்ச்சையாகவே உள்ளது . இனிவரும் காலங்களிலாவது இதற்க்கான விடையை கிடைக்கப்பெற செய்ய ஆராய்ச்சிகள் உதவ வேண்டும் .

Sunday 15 April 2018

இந்தியாவின் 9 இல்லுமினாட்டிகளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் !!!

இந்தியாவின் 9 இல்லுமினாட்டிகளை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் !!!!

வரலாற்று வல்லுனர்களின் கூற்றுப்படி அசோகர் சக்ரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் தான் இந்த 9 இல்லுமினாட்டிகளின் அமைப்பு நிறுவப்பட்டது என்று கூறுகின்றனர் . சுமார் 1 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கலிங்கா போரின் பிற்பாதியில் அசோகரால் உருவாக்கப்பட்டு இன்றளவும் மர்மமாக வைக்கப்பட்டுள்ளது .

போரின் தாக்கத்தால் பாதிக்கபட்ட அசோகர், அறிவியலும், விஞ்ஞானமும் , தொழில்நுட்பமும் மனித உயிர்களுக்கு பாதகமாக விளைந்ததை கண்டு மனம்தாளாமல் சில பெரிய முடிவுகளை எடுத்தார் . அவற்றில் முக்கியமான ஒரு முடிவுதான் உலகில் உள்ள அணைத்து விஞ்ஞானம் , புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் , இயற்கை அதிசயங்கள், அறிய வகை கலை அம்சங்கள் , தற்காப்பு கலைகள் , உயிர்களை பற்றிய ரகசியங்கள்  சேகரித்து உலகின் நன்மைக்காக மறைத்து வைக்க முடிவுசெய்தார் . அந்த ரகசியங்களை பாதுகாக்க தனது ராஜ்யத்தின் 9 சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்த ரகசியங்கள் அனைத்தும் புத்தகமாக பாதிக்கப்பட்டு 9 பேரிடமும் கொடுக்கப்பட்டது . அவர்களின் அத்தியாய கடமைகளாக இந்த ரகசியத்தை பாதுகாப்பாகவும் யார் கையிலும் கிடைக்க பெறாமல் சில குறிப்பிட்ட நாள் வரும்  வரை  இதை மிகவும் ரகசியமாக வைக்கும்படி உதரவுவிடப்பட்டது . மேலும் அவர்கள் உலகின் பல்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.

1923இல் பிரிட்டிஷ் காவல்துறையில் இந்தியாவில் பணியாற்றிய டால்போட் முண்டி தனது புத்தகத்தில் ( THE NINE UNKNOWNS )முதன்முதலாக இந்த இல்லுமினாட்டிகளை பற்றி எழுதினார்.  மேலும் அந்த புத்தகங்கள் அனைத்தும் ஒரு செயற்கையான புதிய மொழியில் (Synthetic Language ) எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.




அவரது குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சில மர்மங்கள் பற்றியும் அந்த 9 புத்தகங்களில் உள்ள சாராம்சம் பற்றியும் காண்போம்.

1. முதல் புத்தகத்தில் பிரச்சார யுக்தி பற்றியும் உளவியல் போர் பற்றியும் எழுத பெற்றுள்ளது.

உலகிலேயே மிக ஆபத்தானது அறிவியல் , "பிரச்சார அறிவியல்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏனென்றால் எவனொருவனையும் அதிகாரத்தில் அமர செய்வது அதுவே என்கிறார் .

2. இரண்டாவது புத்தகம் உடலியல் பற்றியது எனவும் சிறு தொடுதலிலேயே ஒரு மனிதனை கொள்ள முடியும் என்றும் அதன் சாத்தியத்தியதையும் விளக்கியுள்ளனர் .



மிகவும் பழமை வாய்ந்த judo வர்மக்கலை இந்த புத்தகத்தில் இருந்து கசிந்த சில குறிப்புகள் வைத்து நிறுவப்பற்றுகிறது என்று பரவலாக கூறப்படுகிறது .

3. மூன்றாவது புத்தகம் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பற்றியது .

4. நான்காவது புத்தகத்தில் ரசவாதம் பற்றியும் உலோக இயல்பு மாற்றத்தை பற்றியது .

ஒருமுறை நாட்டில் பஞ்சம் வந்தபோது கோயில்களுக்கும் , சேவை பணியாளர்களுக்கும் கோடி கணக்கான தங்கமும் புதிய வகை உலோகங்களும் மர்மமான ஒரு குழுவிடம் இருந்து வந்து சேர்த்ததாக ஒரு புராண குறிப்புகளில் தான் கண்டதாக குறிப்பிடருகிறார்.

5. ஐந்தாவது புத்தகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது ஏனெனில் இதில் தான் உலகின் முக்கியமான தொலைத்தொடர்பு வழிகள் வேற்றுகிரகவாசிகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாக தெறிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

6. ஆறாவது புத்தகத்தில் புவிஈர்ப்பு பற்றிய குறிப்புகளும் புராணகாலத்தில் கூறப்பட்ட விமானவியல் பற்றிய குறிப்புகளும் உள்ளதாகவும் அறியப்படுகிறது .



7. ஏழாவது புத்தகத்தில் பிரபஞ்சத்தை பற்றியும் அதில் அடங்கி உள்ள ரகசியங்கள் பற்றியும் எழுதப்பற்றுகிறது . கால பயணம் செய்வது எப்படி என்பதும் அதன் சூத்திரமும் எழுதப்பெற்றிருக்கிறது என்ற கருதும் நிலவுகிறது .


8. எட்டாவது புத்தகத்தில் ஒளி யை பற்றியும் ஒளியை ஆயுதமாக பயன்படுத்தும் வழிவகைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது .

9. ஒன்பதாவது மற்றும் இறுதி புத்தகத்தில் சமூகவியல் பற்றியும், உலகத்தில் உள்ள பல நகரரீங்கம் பற்றியும், அது எவ்வாறு வீழும் என்பது பற்றியுமான குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன .



காலங்கள் மாறினாலும் இந்த 9 இல்லுமினாட்டிகள் தாங்கள் காத்து வைத்திருந்த ரகசிய புத்தகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் தன் சந்ததியரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பணியை இன்றளவும் தொடர்ந்து காத்து வருகின்றனர். அதில் பலர் பெரிய பதவிகளிலும் உள்ளதாகவும் தெரிகிறது . 

மற்ற நாகரீங்களான எகிப்து , மாயன், திபெத் போன்றே இவர்களும் தங்களுக்கு கிடைத்த அறிய அறிவியதையும், அறிவினைகளையும் மறைத்தே வைத்துள்ளார். 




Sunday 8 April 2018

ஐ.பி.எல். கிரிக்கெட்: சொல்லி அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !!!" த்ரில் " வெற்றி !!!!

அசத்தியசென்னை அணி  கதிகலங்கியமும்பை இந்தியன்ஸ்  

 2 ஆண்டு தடை காலத்திற்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பிய சென்னை அணி இந்த 2018 - 11 வது சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி  இருக்கிறது.


ஐபில் 11வது சீசன் 2018 - முதல் போட்டி 

 ஏப்ரல் 7-ந்தேதி நேற்று வான்கடே மைதானத்தில் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  தொடங்கியது. மே 27 வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் 



சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஐதராபாத் சன் ரைசர்ஸ், , கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற  டோனி 


 டாஸ் ஜெயித்த சென்னைசூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தது. சென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும், ஷேன் வாட்சனும் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு,  நன்கு நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரரான இவின் லீவிஸ் (0) தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ஐ.பி.எல். வரலாற்றில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை முதல்முறையாக பயன்படுத்தியவர் இவின் லீவிஸ் தான். ஐ.பி.எல்.-ல் இது தான் அவருக்கு முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தடுமாறிய  மும்பை  

முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 65 ரன்களே எடுத்திருந்தது. பிற்பாதியில் மும்பை வீரர்கள் அதிரடி காட்டினர். இஷான் கிஷன் 40 ரன்களும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்),  தங்களது பங்குக்கு எடுத்தனர்.

பாண்டியா சகோதரர்கள் அபாரம் 

இறுதிகட்டத்தில் சகோதரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும், குணால் பாண்டயாவும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். குறிப்பாக குணால் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டின் பவுலிங்கில் 2 சிக்சரை பறக்க விட்டு உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.

இலக்கு நிர்ணயம் - சென்னை தடுமாற்றம் 


பின்னர் 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, ஆரம்பம் முதலே மும்பை பவுலர்கள் அதிரடி காட்டினர் . ஷேன் வாட்சன் (16 ரன்), துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா (4 ரன்), அம்பத்தி ராயுடு (22 ரன்), கேப்டன் டோனி (5 ரன்), ஜடேஜா (12 ரன்) ஆகியோர் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சென்னை அணி 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (12 ஓவர்) இழந்து தத்தளித்தது. 

ஜாதவ் காயம் 

மேலும் கேதார் ஜாதவ் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியிறினார் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் வலுவிழந்து காணப்பட்டது.

ப்ராவோ அசத்தல் அதிரடி 



இந்த நிலையில் களம் இறங்கிய  ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றி அனைவரையும் பிரமிக்க வைத்தார். மும்பை பந்து வீச்சை நான்கு திசைக்கும் பறக்கவிட்ட அவர், சென்னை அணிக்கு நம்பிக்கைவூட்டினார். 



 கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் பிராவோ 3 சிக்சர் உள்பட 20 ரன்கள் சேகரித்ததுடன் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பிராவோ 68 ரன்களில் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

சென்னை அணி அதிரடி வெற்றி - சூப்பர் ஆன துவக்கம் 



கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 7 ரன் தேவைபட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. காயத்தால் பாதியில் வெளியேறி மீண்டும் களம் கண்ட கேதர் ஜாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டார். இதில் முதல் 3 பந்துகளை தவற விட்ட கேதர் ஜாதவ் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி .

இறுதியில் ஆட்டநாயகனாக ப்ராவோ தேர்வுசெய்யப்பட்டார் . 





Saturday 7 April 2018

World's smallest Mobile is here!!! - Try it Out!!!!!

World's Best Handy Mobile is here - Try it Out!!!!!


Smallest mobile phone that may trigger the evolution of tiny gadgets is now here. Meet L8 Star Mobile. In the era of big screen smartphones, L8Star stands out from the competition as it comes with tiny display and many more features.


This phone is claimed to weigh lighter than a cigerrete  packet and is smaller than a lighter.

We shouldn't expect what our smartphones give us in this device but we can except some basic communication techniques with modern usage like a bluetooth ipad, calling etc .



Having a second mobile handy may help us during our panic situations.  As it is tiny it can be carried anywhere with less occupancy scope.


Feature Phone
CAn be used as Bluetooth earphone for making a call, listening to music, free your hands from your cellphone, ipad, tablet, PC etc.,
Insert a sim card, it can be used as an independent cell phone.

TO ORDER CALL/WHATSAPP +91-8939200885
Mail stylelicious26@gmail.com

TO feature your products here pl reach us previewclubb@gmail.com/8056922133

Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...