Tuesday 24 July 2018

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

ரஷ்யாவை சேர்ந்த அலினா , கடந்த ஜூன் 12-ஆம் தேதி திருவண்ணாமலை வந்திறங்கினார். விசிறி சாமியார் ஆசிரமம் அருகே தனியார் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்கினார். 




இந்த விவகாரத்தில் போதுமான விளக்கங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் , சில தெரிந்த நியாயமான அதிகாரிகளிடம் என்னதான் நடந்தது என்று கேட்டு தெளிகையில் ,

:பேரடைஸ் விடுதி மலேசியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதனை பாரதி என்ற இளைஞர் லீஸ் முறையில் எடுத்து நடத்தி வருகிறார். அவரது அண்ணன் நீலகண்டன் அவருக்கு உதவியாக இருந்துள்ளார் . ஐந்து அறைகள் கொண்ட விடுதியில் ஆன்லைன் மூலம் அறை பதிவு செய்து தங்கியுள்ளார் அலினா.

கடந்த 14-ஆம் தேதி இரவுதான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது. மணிகண்டன் என்பவரது பிறந்தநாளை பாரதி , நீலகண்டன், டிரைவர் வெங்கடேசன் , அவரது நண்பர் சிவா ஆகியோர் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அதோடு வேறு போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளனர்.

மிதமிஞ்சிய போதையில் , அலினா அறைக்கதவை தட்டி உள்ளே சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலை மீண்டும் சபலத்தில் அலினாவை ரேப் செய்துள்ளனர். பின்பு அலினா எழாமல் போகவே ..பயத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் பலாத்காரம் நடந்திருப்பதை புரிந்து கொண்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார் 

மாவட்ட நீதிபதி மகிழேந்தி கடந்த 17-ஆம் தேதி மாலை மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றி விசாரித்து விட்டு , முறையற்ற விடுதிகள் குறித்து காவல் துறை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுயள்ளேன்" என்றார் .

ரஷ்யா வெளியுறவு துறை அதிகாரி டேவிட்சன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். 

திருவண்ணாமலையில் வெளிநாட்டவரை குறிவைத்து கஞ்சா,ஹெராயின் போதை வஸ்துகள் விற்பனை நடக்கிறது . இது காவல் துறைக்கு தெரிந்தே நடப்பதாகவும் முறையாக மாமூல் போவதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

19-ஆம் தேதி அலினா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் , பாரதி, நீலகண்டன், வெங்கடேசன்  ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளது காவல் துறை .


News Coutesy: நக்கீரன் 24/07/2018 பதிவு 



















Tuesday 17 July 2018

ஸ்ரீதேவி மகள் ஜானவியுடன் ஜோடி சேரும் சிம்பு !!!



வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும்  படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜானவி கபூரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய ஒப்பந்தம் போடப்பற்றுகிறது . இதற்காகன தீவிர முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர் மாநாடு பட தயாரிப்பு குழுவினர்.
படத்தில் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் இந்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

எழுத்தாளராக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை !!!


நம் அனைவர்க்கும் பரிட்சயம் ஆனா ஒரு ஹாலிவுட் நடிகை என்றால் எல்லோர்க்கும் நினைவில் வருவது கமரூன் டயஸ் (Cameron Diaz) தான்.  அசாத்திய திறமையும் அழகும் மிக்க இவர்  ஆறு வருடங்களுக்கு முன் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார். 

இப்போது முழு நேர எழுத்தாளராக மாறியுள்ளார். இளம் பெண்ககளுக்கான டயட் ஸ்லிம் ரகசியங்கள் பற்றிய இவர் எழுதிய புத்தகம் வெற்றிபெற , அடுத்து The Body Book, The Lovely Book என்று எழுதிய நூல்களும் வெற்றிபெற நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் 

இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்துள்ளார். சிறு வயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதத்தல்கள் பற்றி அதில் எழுதவிருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

REF: Anandhavikatan 18/07/2018

Thursday 12 July 2018

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு !!!

இந்திய இராணுவத்தில் பட்டதாரி இன்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்திய இராணுவத்தில் பல்வேறு சேர்க்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னீகள் கிராஜுவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில் , பட்டதாரி என்ஜினீயர்கள் , இந்திய இராணுவ அகாடெமியில் சேர்க்கப்படுகிறார்கள். 

மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள் . இதில் சேர விரும்புவோர் இந்திய குடியுரிமை பெட்ரா ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும் . அவர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 27 வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும். சிவில், ஆர்கிடெக்சர் , மெக்கானிக்கல் , எலக்ட்ரிகல் , கம்ப்யூட்டர் சயின்ஸ் , டெலிகம்யூனிகேஷன் , மெடலுர்ஜிக்கல் , ஐ .டி , எலக்ட்ரானிக்ஸ் , மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்புடைய பட்டப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்ய படுபவர்கள் டேராடூனில் உள்ள இராணுவ அகாடமியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றபின் பணி நியமனம் பெறலாம். லெப்டினன்ட் அதிகாரி முதல் பிரிகேடியர் , மேஜர் ஜெனரல்  
வரை பல்வேறு பதவி உயர்வுகளை பெரும் வாய்ப்பு மிக்க பணியாகும் .

உடல்திறன் தேர்வு,  நுண்ணறிவு திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு 
செய்யப்படுவார்கள் .

விருப்பமும், தகுதியும்   உள்ளவர்கள் இணையதளம் இணையதளம் வழியாக 
விண்ணப்பம்   சமர்ப்பிக்கலாம் . விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் விரிவான  விவரங்களை கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணைய பக்கத்தை பார்க்கவும்.






Wednesday 11 July 2018

அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் - விமான ஆணைய நிறுவனத்தில்(AAI) வேலை !!!



விமான ஆணைய நிறுவனத்தில் (AAI - AIRPORT AUTHORITIES OF INDIA)

வயது வரம்பு 

மேலாளர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30/06/2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் நிர்வாகி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்  27 வயதுக்கு உட்பட்டவர்களாக  இருக்க வேண்டும் . SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் அரசு விதிப்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வி தகுதி 

பி.காம் / ஐ.சி.டபுள்யூ.எ /சி.ஏ /பி.இ /பி.டெக்  படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம் . 

கட்டணம் 

விண்ணப்பதாரர்கள் ரூ 1000 கட்டணம் செலுத்த வேண்டும் .  SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை 

விருப்பமும் , தகுதியும் இருப்பவர்கள் இனைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பம் 16-07-2018 -ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018-ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018 -ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 11-09-2018 முதல் 14-09-2018 வரை நடைபெறுகிறது.


விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் 

http://www.aai.aero/ 


Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...