Thursday 13 September 2018

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560">


விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்ட்ரி -ரஜினியின் 2.0 டீஸர்


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக
உருவாகி வரும் இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்க பட்ட 2.0 படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

முழுக்க முழுக்க 3டி கேமராவை பயன்படுத்தி 2.0 படம் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ரஜினி , அக்சய் குமார் , எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய படத்தின் வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது . எ.ஆர் . ரகுமான் இசை அமைக்க லைக்கா நிறுவனம்  இப்படத்தை தயாரித்துள்ளது . படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. 




உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 3000 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் 2.0 படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 3டி யில் வெளியாகியுள்ள இந்த டீசரை திரையரங்குகளில் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் டாக்டர் ரிச்சர்ட் ஆகா அக்ஷய்  குமார் , சிட்டி ரஜினி மோதும் காட்சிகளும், செல் போன் வானத்தை நோக்கி ஈர்க்கப்படும் காட்சிகளும் பிரமிப்பை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் சில காட்சிகள் படத்தின் முக்கிய பாத்திரங்களை காட்டும் வண்ணம் எடிட் செய்து சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது .

கண்டிப்பாக தமிழ் சினிமாவின் புதிய மைல் கல்லாக இப்படம் அமையும் என்பது உறுதி என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

Tuesday 24 July 2018

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

காமுகர்களிடம் சிக்கிய ரஷ்ய பெண் !!!!

ரஷ்யாவை சேர்ந்த அலினா , கடந்த ஜூன் 12-ஆம் தேதி திருவண்ணாமலை வந்திறங்கினார். விசிறி சாமியார் ஆசிரமம் அருகே தனியார் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்கினார். 




இந்த விவகாரத்தில் போதுமான விளக்கங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் , சில தெரிந்த நியாயமான அதிகாரிகளிடம் என்னதான் நடந்தது என்று கேட்டு தெளிகையில் ,

:பேரடைஸ் விடுதி மலேசியாவில் உள்ள ஒருவருக்கு சொந்தமானது. அதனை பாரதி என்ற இளைஞர் லீஸ் முறையில் எடுத்து நடத்தி வருகிறார். அவரது அண்ணன் நீலகண்டன் அவருக்கு உதவியாக இருந்துள்ளார் . ஐந்து அறைகள் கொண்ட விடுதியில் ஆன்லைன் மூலம் அறை பதிவு செய்து தங்கியுள்ளார் அலினா.

கடந்த 14-ஆம் தேதி இரவுதான் அந்த விபரீதம் நடந்திருக்கிறது. மணிகண்டன் என்பவரது பிறந்தநாளை பாரதி , நீலகண்டன், டிரைவர் வெங்கடேசன் , அவரது நண்பர் சிவா ஆகியோர் மது அருந்தி கொண்டாடியுள்ளனர். அதோடு வேறு போதை மருந்தும் பயன்படுத்தியுள்ளனர்.

மிதமிஞ்சிய போதையில் , அலினா அறைக்கதவை தட்டி உள்ளே சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலை மீண்டும் சபலத்தில் அலினாவை ரேப் செய்துள்ளனர். பின்பு அலினா எழாமல் போகவே ..பயத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் பலாத்காரம் நடந்திருப்பதை புரிந்து கொண்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பியுள்ளார் 

மாவட்ட நீதிபதி மகிழேந்தி கடந்த 17-ஆம் தேதி மாலை மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றி விசாரித்து விட்டு , முறையற்ற விடுதிகள் குறித்து காவல் துறை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுயள்ளேன்" என்றார் .

ரஷ்யா வெளியுறவு துறை அதிகாரி டேவிட்சன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். 

திருவண்ணாமலையில் வெளிநாட்டவரை குறிவைத்து கஞ்சா,ஹெராயின் போதை வஸ்துகள் விற்பனை நடக்கிறது . இது காவல் துறைக்கு தெரிந்தே நடப்பதாகவும் முறையாக மாமூல் போவதால் அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

19-ஆம் தேதி அலினா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் , பாரதி, நீலகண்டன், வெங்கடேசன்  ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளது காவல் துறை .


News Coutesy: நக்கீரன் 24/07/2018 பதிவு 



















Tuesday 17 July 2018

ஸ்ரீதேவி மகள் ஜானவியுடன் ஜோடி சேரும் சிம்பு !!!



வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும்  படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜானவி கபூரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய ஒப்பந்தம் போடப்பற்றுகிறது . இதற்காகன தீவிர முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர் மாநாடு பட தயாரிப்பு குழுவினர்.
படத்தில் ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் இந்த செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

எழுத்தாளராக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை !!!


நம் அனைவர்க்கும் பரிட்சயம் ஆனா ஒரு ஹாலிவுட் நடிகை என்றால் எல்லோர்க்கும் நினைவில் வருவது கமரூன் டயஸ் (Cameron Diaz) தான்.  அசாத்திய திறமையும் அழகும் மிக்க இவர்  ஆறு வருடங்களுக்கு முன் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார். 

இப்போது முழு நேர எழுத்தாளராக மாறியுள்ளார். இளம் பெண்ககளுக்கான டயட் ஸ்லிம் ரகசியங்கள் பற்றிய இவர் எழுதிய புத்தகம் வெற்றிபெற , அடுத்து The Body Book, The Lovely Book என்று எழுதிய நூல்களும் வெற்றிபெற நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் 

இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்துள்ளார். சிறு வயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதத்தல்கள் பற்றி அதில் எழுதவிருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

REF: Anandhavikatan 18/07/2018

Thursday 12 July 2018

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு

இராணுவத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் சேர்ப்பு - அரசு புதிய அறிவிப்பு !!!

இந்திய இராணுவத்தில் பட்டதாரி இன்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்திய இராணுவத்தில் பல்வேறு சேர்க்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னீகள் கிராஜுவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில் , பட்டதாரி என்ஜினீயர்கள் , இந்திய இராணுவ அகாடெமியில் சேர்க்கப்படுகிறார்கள். 

மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள் . இதில் சேர விரும்புவோர் இந்திய குடியுரிமை பெட்ரா ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும் . அவர்கள் 1-1-2019 தேதியில் 20 முதல் 27 வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும். சிவில், ஆர்கிடெக்சர் , மெக்கானிக்கல் , எலக்ட்ரிகல் , கம்ப்யூட்டர் சயின்ஸ் , டெலிகம்யூனிகேஷன் , மெடலுர்ஜிக்கல் , ஐ .டி , எலக்ட்ரானிக்ஸ் , மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்புடைய பட்டப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கு தேர்வு செய்ய படுபவர்கள் டேராடூனில் உள்ள இராணுவ அகாடமியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றபின் பணி நியமனம் பெறலாம். லெப்டினன்ட் அதிகாரி முதல் பிரிகேடியர் , மேஜர் ஜெனரல்  
வரை பல்வேறு பதவி உயர்வுகளை பெரும் வாய்ப்பு மிக்க பணியாகும் .

உடல்திறன் தேர்வு,  நுண்ணறிவு திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு 
செய்யப்படுவார்கள் .

விருப்பமும், தகுதியும்   உள்ளவர்கள் இணையதளம் இணையதளம் வழியாக 
விண்ணப்பம்   சமர்ப்பிக்கலாம் . விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் விரிவான  விவரங்களை கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணைய பக்கத்தை பார்க்கவும்.






Wednesday 11 July 2018

அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் - விமான ஆணைய நிறுவனத்தில்(AAI) வேலை !!!



விமான ஆணைய நிறுவனத்தில் (AAI - AIRPORT AUTHORITIES OF INDIA)

வயது வரம்பு 

மேலாளர் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 30/06/2018 தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் நிர்வாகி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்  27 வயதுக்கு உட்பட்டவர்களாக  இருக்க வேண்டும் . SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் அரசு விதிப்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வி தகுதி 

பி.காம் / ஐ.சி.டபுள்யூ.எ /சி.ஏ /பி.இ /பி.டெக்  படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம் . 

கட்டணம் 

விண்ணப்பதாரர்கள் ரூ 1000 கட்டணம் செலுத்த வேண்டும் .  SC /ST /OBC பிரிவினருக்கும் மாற்று திறனாளிகள் , முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை 

விருப்பமும் , தகுதியும் இருப்பவர்கள் இனைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் . இதற்கான விண்ணப்பம் 16-07-2018 -ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018-ந்து தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்த 18-08-2018 -ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 11-09-2018 முதல் 14-09-2018 வரை நடைபெறுகிறது.


விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் 

http://www.aai.aero/ 


Friday 29 June 2018

மாணவர்களின் பாச போராட்டம் வென்றது !!! ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!

இடம் மாற்றம் செய்ய பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி!!!!!

வைரல் ஆனா மாணவர்கள் கதறி அழுத வீடியோ!!!! 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவளில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார் .

இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர். அப்போது எடுக்கப்பட்ட மொபைல் வீடியோ பெருதும் விறல் ஆனது .

கிழித்து எறிந்தார் 

இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் தொடர்ந்து பணியாற்ற அதிகாரிகள் வழங்கினார்கள் . மாணவர்கள் பகவானை சுற்றி வளைத்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும் , அவர்களது பெற்றோர்களையும்  அமைதி படுத்த பகவானுக்கு வழங்கிய விடுப்பு கடிதத்தை அவர்கள் முன்னாள் கிழித்து எறிந்தார் .


இதையடுத்து மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் கலைந்து சென்றனர் . இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு கடிதம் வழங்கப்பட்டது . அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்த்து விட்டார் .

பணியை தொடங்கினார் 

இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலை பள்ளியில் மாற்றுப்பணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர் .

இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கள்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார் .










பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புதிய முறை அறிமுகம்!!!!!- Passport Seva App !!!





இருந்த இடத்திலேயே இனி பெறலாம் 


பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்கும் நிலை தான் தற்போது உள்ளது . இந்த அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும் . இதனால் மற்ற ஊர்களில் வசிப்பவர்கள் இதற்காக நேரில் வந்து அலைய நேரிடும் .

இந்த நிலையில், இருந்த இடத்திலேயே பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் சேவா  என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஜூன் 26ஆம் தேதி 2018-இல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலியை செல்போன் , கணிப்பொறி , லேப்டாப் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.



இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்ப்போர்ட்டை விரைவாக பெற இயலும் .
நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில் , நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் .

Sunday 27 May 2018

மீண்டும் மகுடம் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -VIVO IPL 2018

மீண்டும் மகுடம் சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -VIVO IPL 2018

ஐபில் 2018 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை - ஐதராபாத் அணிகளுக்கிடையே மே 27 அன்று  நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக சென்னை அணி 19 முறை பிளே ஆஃப் சுற்றில் விளையாடியுள்ளது. அதில் 7தோல்விகளும், 11 முறை வெற்றியையும் ருசித்துள்ளது.  இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி 7 முறையும், ஐதராபாத் அணி 2 முறை வென்றுள்ளது .


டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி . முதலில் களம்  இறங்கிய கோஸ்வாமி , தவான் ஜோடி ஆரம்பம் முதலே கொஞ்சம் திணறியது. பின்னர் கோஸ்வாமி ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் எடுத்திருந்த நிலையின் கரன் சர்மா பந்துவீச்சில் டோனியின் அருமையான கீப்பிங் திறனால் stumping என்ற முறையில் அவுட் ஆகி திரும்பினார் .

பின்னர் களம் இறங்கிய யூசுப் பதான் சாஹிப் உல் ஹசன் ஜோடி அதிரடி காட்டியது . யூசுப் பதான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பதினைந்து ஓவர்கள் முடிவில் அணியின் ஸ்கோர் 126 ஆக இருந்தது இது அந்த அணிக்கு நல்ல அஸ்திவாரமாக அமைந்தது. பிராவோ வீசிய 16 வது ஓவரில் கேட்ச் என்ற முறையில் சாஹிப் உல் ஹசன் வெளியேறினார் . இவரை தொடர்ந்து ஹூடா களம்  இறங்கினார் .அவர் சொற்ப ரன்னிலேயே கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் நிகிடி மற்றும் தாகூர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக சன் ரைஸ்ர் அணி 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது .

சன்ரைசர்ஸ் தனது பந்துவீச்சை தொடங்கிய முதல் ஓவர் ரன் ஏதும் கொடுக்காமல் புவனேஷ்குமார் சிறப்பாக வீசினார். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர்கள் வாட்ஸனும் டுப்லெஸிஸ்.

அடுத்து காலம் இறங்கிய ரெய்னா வாட்சன் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை நன்றா உயர்த்தினார். ரெய்னா 12 ஒவேரிலே கேட்ச் என்ற முறையில் அவுட் ஆகி வெளியேறினார் . ஆனாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார். அம்பட்டி ராயுடு வெற்றி இலைகை அடைந்த போது வாட்சன் நூற்றுப்பதினெழு ரன்னுடன் ஆட்டமிளாகாமல் இருந்தார். வாட்சன் 57 பந்துகளில் இந்த ஸ்கோரை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இறுதியில் சென்னை அணி கோப்பையை மூன்றவது முறையாக கைப்பற்றியது .  சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் சிறந்த வீரரராக தேர்ந்தெடுக்கபட்டர்.



Saturday 26 May 2018

2019 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை அறிவிக்க போகும் 8 உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

2019 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வை  அறிவிக்க போகும் 8 உலக புகழ்  பெற்ற கிரிக்கெட் வீரர்கள் 

2019 கிரிக்கெட் உலக கோப்பை நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அந்த போட்டிகள் முடிவடைந்த பிறகு தனது ஓய்வை அறிவிக்க இருக்கும் வீரர்கள் யார் ?


1. சாஹிப் உல் ஹசன்




பங்களாதேஷ் நாட்டின் மிக முக்கிய வீரரும் சிறந்த ஆல் ரவுண்டர் சாஹிப் உல் ஹசன் இந்த உலககோப்பையின் முடிவில் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

2. க்ளென் மாஸ்வ்ல்



ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மாஸ்வ்ல் தனது ஓய்வை 2019 உலககோப்பைக்கு பிறகு அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

3. கிறிஸ் கெய்ல்


மேற்கிந்திய தீவுகளின் துவக்க ஆட்டக்காரரும் ஐபில் போட்டிகளின் நட்சத்திர வீரருமான கேய்ல் தனது ஓய்வை இந்த உலக கோப்பைக்கு பிறகு தெரிவிப்பார் என்று தெரிகிறது . இவர் ஐபில் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது .

4. AB டிவில்லர்ஸ்


தென்னாபிரிக்கா அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் என்று அழைக்கபடும் டிவில்லர்ஸ் ஏற்கனவே அணைத்து உலக கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார் . மேலும் ஐபில் போட்டிகளில் இருந்தும் அடுத்த வருடம் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது

5. லசித் மலிங்க


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மலிங்கா தனது டெஸ்ட் போட்டிகளின் ஓய்வை அறிவித்து விட்ட  நிலையில் தனது ஒரு நாள் போட்டியின் ஓய்வறிக்கயை உலககோப்பைக்கு பிறகு விளியிடுவார் என்று தெரிகிறது.

6. மஹிந்திரா சிங்க் டோனி


இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான டோனி 2019 உலக கோப்பைக்கு பிறகு அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.



இவர்களின் சிறந்த ஆட்டத்தை இனி காண முடியுமா என்ற கேள்வியும் வருத்தமும் மேலோங்கி இருந்தாலும் இளம் வீரர்களுக்கு வழிகொடுத்து தனது ஓய்வை அறிவிக்க  முன்வந்த வீரர்களை நாம் மனமார பாராட்டலாம் .



Monday 30 April 2018

IPL 2018 - CSK vs DD | தோனி அதிரடி : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!!!

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது. புனேவில் நடக்கும் 30வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், ‘டாஸ்’ வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 


சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்து காலம் இறங்க முடிவுசெய்தது . சிறந்த தொடக்கம் :
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சன் & டூப்லெஸிஸ் ஜோடி முதல் விக்கெட்க்கு 00 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் டுப்லெஸிஸ் கேட்ச் என்ற முறையில் ஆட்டமிழந்தார் . பின்னர் இறங்கிய ரெய்னா சொற்ப ரனில் ஆட்டமிழக்க சென்னை அணி சிறு தடுமாற்றம் கண்டது. ஆனாலும் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் . அவர் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் இருந்தது .

டோனி அசத்தல் ஆட்டம் 

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றா ர். தோனி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சிக்ஸர்களை விளாசினார். ராயுடு வுடன் ஜோடி சேர்த்து அணியின் ஸ்கோரை 211 ஆக உயர்த்தினார். இறுதியில் 212 எதுதான் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி .

டெல்லி அணி திணறல் :

டெல்லி அணி பேட்டிங் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டியது ஆனால் பவர் பழைய ஓவர்களில் 56 ரன்கள் குவித்திருந்தநிலையில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது . ஏழாவது ஓவரின்  முடிவில் டெல்லி அணியின் ஷ்ரேயஸ் ஐயர் ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார் . ஜடேஜா வீசிய ஒன்பதாவது ஓவரில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன மாக்ஸ்வேள் போல்ட் என்ற முறையில் ஆட்டமிழக்க டெல்லி அணி மிக பெரிய சரிவை சந்தித்தது . ரிஷஅப்  பந்த் நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார், அவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் குடுத்து அவுட் ஆனார். பிராவோ வீசிய 19 வது ஓவரில் 3 சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார் விஜய் ஷங்கர் . இருபது  ஓவர்கள் முடிவடைந்த நிலையின் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது . விஜய் ஷங்கர் ஆட்டம் இழக்காமல் இறுதி வரை போராடினார். அவர் 31 பந்துகளில் 54* ரன்கள் எடுத்திருந்தார்.
 ஆட்டநாயகன் விருது 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் க்கு கொடுக்கப்பட்டது .



Followers

விரட்டும் செல்போனும் மிரட்டும் கழுகும் -ரஜினியின் 2.0 டீஸர்

/www.youtube.com/embed/7cx-KSsYcjg" width="560"> விரட்டும் செல்போனும்  மிரட்டும் கழுகும்  - சிட்டி ரீ -என்...